ADDED : ஜூலை 07, 2024 02:50 AM
அந்தியூர்:அந்தியூர்
மற்றும் சுற்று வட்டார பகுதிகளில், நேற்று முன்தினம் மாலை பலத்த
காற்றுடன் மழை பெய்தது.
பருவாச்சி அருகே பலத்த காற்றால் சாலையோர மரம்
வேருடன் சாய்ந்தது. இதனால் பருவாச்சி-அம்மனாம்பாளையம் சாலையில்
போக்குவரத்து பாதித்தது. நெடுஞ்சாலைத்துறையினர் மரத்தை
அப்புறப்படுத்திய பின் போக்குவரத்து சீரானது.