Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ பு.புளியம்பட்டி, சென்னிமலையில் கும்பாபிஷேக விழா கோலாகலம்

பு.புளியம்பட்டி, சென்னிமலையில் கும்பாபிஷேக விழா கோலாகலம்

பு.புளியம்பட்டி, சென்னிமலையில் கும்பாபிஷேக விழா கோலாகலம்

பு.புளியம்பட்டி, சென்னிமலையில் கும்பாபிஷேக விழா கோலாகலம்

ADDED : ஜூலை 08, 2024 07:03 AM


Google News
பு.புளியம்பட்டி : புன்செய்புளியம்பட்டியில் மாதம்பாளையம் சாலையில் கருப்-பண்ண சுவாமி கோவில் உள்ளது. கோவிலில் திருப்பணி முடிந்த நிலையில், கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. முன்னதாக நான்கு கால யாக பூஜையை தொடர்ந்து, வேத மந்திரங்கள் முழங்க விமான கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றி அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடந்தது. அதை தொடர்ந்து ராஜகணபதி, கன்-னிமார் பரிவார தெய்வங்களுக்கும் புனித நீர் ஊற்றி மகா அபி-ஷேகம் நடந்தது. கும்பாபிஷேக விழாவில் சுற்றுவட்டார பகுதி-களை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்கள் மீது புனித தீர்த்தம் தெளிக்கப்பட்டது.

சென்னிமலையில்... சென்னிமலை யூனியன் பனியம்பள்ளி ஊராட்சி கவுண்டம்பாளை-யத்தில், பழமையான முத்து மாரியம்மன் மற்றும் சக்தி விநாயகர் கோவில் புனரமைப்பு செய்யப்பட்டு கும்பாபிஷேக விழா கடந்த, 5ம் தேதி துவங்கியது. நேற்று அதிகாலை நான்காம் கால யாக பூஜை உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன. காலை, 9:30 மணிக்கு முத்து மாரியம்மன், விநாயகர் கோவில் கோபுர கலசங்க-ளுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. சென்-னிமலை ஆதி சைவ அர்ச்சகர்கள் அறக்கட்டளை தலைவர் சிவ ஸ்ரீமதி சிவாச்சாரியார் தலைமையில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்-டது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us