Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ சென்னிமலையில் தம்பதி உள்பட 3 பேர் கொலையில் 2 பேர் கைது

சென்னிமலையில் தம்பதி உள்பட 3 பேர் கொலையில் 2 பேர் கைது

சென்னிமலையில் தம்பதி உள்பட 3 பேர் கொலையில் 2 பேர் கைது

சென்னிமலையில் தம்பதி உள்பட 3 பேர் கொலையில் 2 பேர் கைது

ADDED : ஜூலை 22, 2024 08:56 AM


Google News
சென்னிமலை : சென்னிமலையை அடுத்த ஒட்டன்குட்டை, கரி-யாங்காட்டு தோட்டத்தில் வசித்த தம்பதியர் முத்துசாமி, 85, சாமியாத்தாள், 74; இருவரும் கடந்த ஆண்டு கொலை செய்யப்பட்டனர். பீரோவில் இருந்த தங்க நகை, பணம் கொள்ளை போனது.

இதேபோல், 2022ல் சென்னிமலையை அடுத்த உப்பிலிபாளையம், குட்டையகாட்டு தோட்-டத்தில் விவசாயி துரைசாமி கவுண்டர் கொலை செய்யப்பட்டார். இங்கும் நகை கொள்ளை போனது. இரு சம்பவங்களிலும், கொலையாளி-களை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் இரு வழக்குகளிலும் தொடர்புடைய இருவரை, சென்னிமலை போலீசார் கைது செய்யதுள்ளனர்.

இதுகுறித்து போலீசார் கூறியதாவது: நீலகிரி மாவட்டம் எருமாட்டை சேர்ந்தவர் கண்ணன், 25; தஞ்சாவூர் மாவட்டம் மனோஜ் பட்டி, பொதிகை நகரை சேர்ந்தவர் இளையராஜன், 28; இருவரும், மூன்று பேர் கொலை வழக்கில் கைது செய்யப்-பட்டனர். அவர்களிடம் இருந்து ஆறு பவுன் நகை பறிமுதல் செய்யப்பட்டது. இன்னும் சிலருடன் சேர்ந்து கொலை செய்ததை ஒப்புக் கொண்டுள்-ளனர். ஒரு திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு இருவரும், ஈரோடு மாவட்ட சிறையில் அடைக்-கப்பட்டுள்ளனர். இருவரையும் சென்னிமலை அழைத்து விசாரணை நடந்தது. இந்த கொலை வழக்குகளில் இருவரும் கைது செய்யப்பட்டு, பவானி கோர்ட்டில் நீதிபதி முன் ஆஜர் செய்து, மீண்டும் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டனர். இவ்வாறு போலீசார் கூறினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us