Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ ஊதியூரில் சந்துக்கடையில்மது விற்ற 2 பேர் கைது

ஊதியூரில் சந்துக்கடையில்மது விற்ற 2 பேர் கைது

ஊதியூரில் சந்துக்கடையில்மது விற்ற 2 பேர் கைது

ஊதியூரில் சந்துக்கடையில்மது விற்ற 2 பேர் கைது

ADDED : மார் 28, 2025 01:02 AM


Google News
ஊதியூரில் சந்துக்கடையில்மது விற்ற 2 பேர் கைது

காங்கேயம்:காங்கேயம் அருகே ஊதியூர் சுற்று வட்டாரத்தில், சட்டவிரோத மது விற்பனை நடப்பதாக ஊதியூர் போலீசாருக்கு தகவல் போனது. இதையடுத்து நொச்சிபாளையம், இச்சிபட்டி, நல்லிமடம், தாளக்கரை பகுதியில் சோதனை மேற்கொண்டனர். தாளக்கரையில் மது விற்பனை செய்த வேல்முருகனை, 50, கைது செய்து, 26 பிராந்தி பாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதேபோல் பங்காம்பாளையத்தில் முத்து பழனியை, 32, கைது செய்து, 15 பிராந்தி பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us