Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ கொலை வழக்கில்கைதானவர் மீது குண்டாஸ்

கொலை வழக்கில்கைதானவர் மீது குண்டாஸ்

கொலை வழக்கில்கைதானவர் மீது குண்டாஸ்

கொலை வழக்கில்கைதானவர் மீது குண்டாஸ்

ADDED : மார் 27, 2025 02:01 AM


Google News
கொலை வழக்கில்கைதானவர் மீது குண்டாஸ்

ஈரோடு:ஈரோடு, திண்டல், காரப்பாறை புதுகாலனியை சேர்ந்தவர் ஸ்ரீதர், 28, ஏ.சி மெக்கானிக். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் மகன், மகள் உள்ளனர். கடந்த பிப்.,24ல் நண்பர்களான திண்டல், தெற்கு பள்ளத்தை சேர்ந்த தமிழரசு, 28, பாலமுருகன், 29, ஆகியோருடன் மது அருந்தினார். அப்போது ஏற்பட்ட வாய் தகராறில், பாலமுருகனை தமிழரசு தாக்கியுள்ளார். பாலமுருகன் புகாரின்படி ஈரோடு தாலுகா போலீசார், தமிழரசு மீது வழக்கு பதிவு செய்து தேடி வந்தனர். கடந்த பிப்.,26ல் வீட்டில் துாங்கி கொண்டிருந்த ஸ்ரீதரை கத்தியால் குத்தி, தமிழரசு கொலை செய்தார். தமிழரசை கைது செய்த போலீசார், கோவை மத்திய சிறையில் அடைத்தனர். தமிழரசு மீது ஏற்கனவே ஒரு கொலை வழக்கு நிலுவையில் உள்ளது. தொடர் குற்ற சம்பவங்களில் ஈடுபடும் தமிழரசுவை குண்டர் சட்டத்தில் கைது செய்ய, எஸ்.பி., ஜவகர், கலெக்டருக்கு பரிந்துரைத்தார். பரிந்துரையை கலெக்டர் ஏற்றதால், தமிழரசு மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது. இதற்கான உத்தரவு நகலை ஈரோடு தாலுகா போலீசார் நேற்று வழங்கினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us