Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ ரூ.2.75 கோடி நிதி தராமல் இழுத்தடிப்பு யூனியன் ஆபீசில் பஞ்., தலைவி போராட்டம்

ரூ.2.75 கோடி நிதி தராமல் இழுத்தடிப்பு யூனியன் ஆபீசில் பஞ்., தலைவி போராட்டம்

ரூ.2.75 கோடி நிதி தராமல் இழுத்தடிப்பு யூனியன் ஆபீசில் பஞ்., தலைவி போராட்டம்

ரூ.2.75 கோடி நிதி தராமல் இழுத்தடிப்பு யூனியன் ஆபீசில் பஞ்., தலைவி போராட்டம்

ADDED : ஜூலை 23, 2024 01:48 AM


Google News
தாராபுரம் : பஞ்சாயத்து வளர்ச்சி பணிகளுக்கான நிதியை தராமல் இழுத்த-டிப்பதாக கூறி, யூனியன் அலுவலகத்தில் இரவை கடந்து பஞ்., தலைவி போராட்டத்தில் ஈடுபட்டார்.

தாராபுரத்தை அடுத்த கவுண்டச்சி புதுார் ஊராட்சி தலைவர் செல்வி, 36; தாராபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்-துக்கு நேற்று மதியம் வந்தார். பதாகையுடன் வளாகத்தின் மத்-தியில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.

''தனது பஞ்சாயத்து பகுதியில் வளர்ச்சி பணிகளுக்கான, 2.75 கோடி ரூபாய் நிதியை, 8 மாத காலமாக தொடர்ந்து வலியுறுத்-தியும், அதிகாரிகள் தர மறுக்கின்றனர். தீர்வு காணும் வரை காத்தி-ருப்பு போராட்டத்தில் ஈடுபடுவேன்,'' என்றார். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் முருகன் பேச்சுவார்த்தை நடத்தினார். உடன்-பாடும் ஏற்படாததால் அவர் சென்றார்.

இதனால் செல்வி தனது போராட்டத்தை தொடர்ந்தார். இரவு வரை போராட்டம் நீடித்த நிலையில், இரவு, 9:00 மணியளவில் தாராபுரம் தாசில்தார் கோவிந்தசாமி வந்தார். செல்வியிடம் நடந்-ததை கேட்டு, அது தொடர்பாக அதிகாரிகளிடம் போனில் பேசினார். பிறகு கோரிக்கை நிறைவேற நடவடிக்கை எடுப்பதா-கவும், போராட்டத்தை கைவிடும்படியும் கூறினார். அதற்கு மறுப்பு தெரிவித்த செல்வி, நிலுவை நிதி தொடர்பான நிர்வாக அனுமதி கிடைக்கும் வரை, நகர மாட்டேன் என்று தெரிவித்து விட்டார். இதனால் தாசில்தாரும் அங்கிருந்து கிளம்பி சென்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us