Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ 44.50 லட்சம் கிலோ கலப்பு உப்பு சுத்திகரிப்புக்காக அனுப்பி வைப்பு

44.50 லட்சம் கிலோ கலப்பு உப்பு சுத்திகரிப்புக்காக அனுப்பி வைப்பு

44.50 லட்சம் கிலோ கலப்பு உப்பு சுத்திகரிப்புக்காக அனுப்பி வைப்பு

44.50 லட்சம் கிலோ கலப்பு உப்பு சுத்திகரிப்புக்காக அனுப்பி வைப்பு

ADDED : ஜூலை 06, 2024 06:11 AM


Google News
ஈரோடு, : சிப்காட் வளாகத்தில் இருந்து, 44.50 லட்சம் கிலோ கலப்பு உப்பு, சுத்திகரிப்புக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஈரோடு கலெக்டர் ராஜகோபால் சுன்கரா வெளி-யிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

பெருந்துறை சிப்காட் வளாகத்தில் இயங்கி வரும் சாயத்தொ-ழிற்சாலைகளின் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் உற்பத்தி-யாகும் திடக்கழிவு, சிமென்ட் தொழிற்சாலைகளுக்கு மாற்று மூலப்பொருளாக அனுப்பி வைக்கப்படுகிறது. மத்திய மாசு கட்-டுப்பாட்டு வாரிய வழிகாட்டுதல்படி, ராமநாதபுரம் மாவட்-டத்தில் கலப்பு உப்பு சுத்திகரிப்பு நிலையம் செயல்படுகிறது. இந்-நிறுவனம் மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் கலப்பு உப்புகளை சுத்திகரிப்பு செய்ய அங்கீகாரம் பெற்றுள்ளது.

கடந்த மார்ச் முதல் பெருந்துறை சிப்காட் சாய தொழிற்சா-லையில் இருந்து கலப்பு உப்பு அனுப்பி வைக்கப்படுகிறது. இதன்படி ஜூன் இறுதி வரை, 44 லட்சத்து, 50,000 கிலோ கலப்பு உப்பு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதில்லாமல் சிப்காட் வளாகத்தில் இயக்கத்தில் இல்லாத தோல் தொழிற்சா-லைகளின் பொது சுத்திகரிப்பு நிலைய வளாகத்தில் சேமித்து வைக்கப்பட்டுள்ள, 450 டன் அளவு திடக்கழிவுகளில், 180 டன் திடக்கழிவு சிமென்ட் தொழிற்சாலைகளுக்கு மறு மூலப்பொரு-ளாக அனுப்பப்பட்டுள்ளது. இவ்வாறு தெரிவித்துள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us