Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு

அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு

அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு

அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு

ADDED : மார் 28, 2025 01:06 AM


Google News
அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு

ஈரோடு:ஈரோடு, கொல்லம்பாளையம், ரயில்வே எலக்ட்ரிக் லோகோ ஷெட் அருகே கடந்த, 25ம் தேதி மதியம், 45 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் சடலம் கிடந்தது. மெரூன் கலர் டி-சர்ட், சிமெண்ட் கலர் வேஷ்டி அணிந்து இருந்தார். வலது கையில் பி.ஆர்.எஸ், இடது கையில் பி+டி என பச்சை குத்தப்பட்டிருந்தது. பெருந்துறை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு சடலத்தை அனுப்பி, சூரம்பட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

* கொடுமுடியை அடுத்த சத்திரப்பட்டி திட்டுக்காடு சுரேஷ் என்பவரின் வாழை தோட்டத்துக்கு கிழக்கே காவிரி ஆற்றங்கரையோரம், 40 வயது மதிக்கதக்க ஆண் சடலம் மிதந்தது. மலையம்பாளையம் போலீசார் கைப்பற்றி, இறந்தவர் யார்? என்று விசாரணை மேற்கொண்டுள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us