Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ அகற்றப்படாத ஜல்லிக் கற்கள் பாதசாரிகள் பரிதவிப்பு

அகற்றப்படாத ஜல்லிக் கற்கள் பாதசாரிகள் பரிதவிப்பு

அகற்றப்படாத ஜல்லிக் கற்கள் பாதசாரிகள் பரிதவிப்பு

அகற்றப்படாத ஜல்லிக் கற்கள் பாதசாரிகள் பரிதவிப்பு

ADDED : மே 25, 2025 04:53 AM


Google News
Latest Tamil News
ஒட்டன்சத்திரம் : ஒட்டன்சத்திரம் டெம்போ ஸ்டாண்ட் அருகே கொட்டப்பட்ட ஜல்லிக்கற்கள் நீண்ட நாட்களாக அப்புறப்படுத்தப்படாமல் இருப்பதால் பாதசாரிகள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

ஒட்டன்சத்திரம் - திண்டுக்கல் ரோட்டில் டெம்போ ஸ்டாண்ட் உள்ளது. இதன் மேற்குப் பகுதியில் ரோட்டில் ஏற்பட்ட பள்ளத்தை சீரமைப்பதற்கு நெடுஞ்சாலை துறையினர் ஜல்லிக்கற்களை கொண்டு வந்து கொட்டினர்.

சீரமைப்பு செய்யப்பட்டு பல நாட்கள் கடந்த பின்பும் ரோட்டில் கொட்டப்பட்ட ஜல்லிக்குவியலை அள்ளி அப்புறப்படுத்தாமல் அப்படியே விட்டு விட்டனர். இப்பகுதியில் வங்கிகள், ஓட்டல்கள், மருந்து கடைகள் அதிகம் உள்ளன.

தினமும் நூற்றுக்கணக்கானோர் இப்பகுதிக்கு வந்து செல்லும் நிலையில், ஜல்லி குவியல் இருப்பதால் பொதுமக்கள் நடந்து செல்வதற்கும், வாகனங்களை இயக்கவும் சிரமம் ஏற்பட்டுள்ளது. நெடுஞ்சாலைத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us