ADDED : மே 25, 2025 04:53 AM
வடமதுரை: அய்யலுாார் அருகே கஸ்பா அய்யலுாரில் மளிகைக்கடை நடத்துபவர் சந்திரக்குமார் 35.
திண்டுக்கல் பள்ளியில் தனது மகளுக்கு அட்மிஷன் பணி முடித்து இருவரும் காரில் ஊர் திரும்பினர். திண்டுக்கல் திருச்சி நான்குவழிச்சாலையில் வேல்வார்கோட்டை பிரிவை கடந்தபோது முத்தனாங்கோட்டை கண்ணன் 35, ஓட்டி வந்த டூவீலருடன் மோதிய கார் சென்டர் மீடியனில் மோதியது. மூவரும் காயமடைந்தனர். வடமதுரை போலீசார் விசாரிக்கின்றனர்.