Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ ஆத்து மேட்டில் ஸ்தம்பித்த போக்குவரத்து

ஆத்து மேட்டில் ஸ்தம்பித்த போக்குவரத்து

ஆத்து மேட்டில் ஸ்தம்பித்த போக்குவரத்து

ஆத்து மேட்டில் ஸ்தம்பித்த போக்குவரத்து

ADDED : ஜூன் 08, 2025 04:25 AM


Google News
வேடசந்துார் : வேடசந்துார் வடமதுரை ரோட்டில் உள்ள பஸ் ஸ்டாண்டில் கட்டடப் பணிகள் நடைபெறுவதால் மூடப்பட்டுள்ளது.

தற்காலிக பஸ் ஸ்டாண்ட் ஆத்துமேடு கரூர் ரோட்டில் செயல்படுகிறது. இதனால் அனைத்து பஸ் போக்குவரத்து,பொதுமக்களின் பயன்பாடு ஆத்துமேட்டை சுற்றியே நடைபெறுகின்றன.

நேற்று மாலை நுாற்பாலை பஸ் , வாகனங்கள், பொதுமக்கள் செல்ல ஆத்து மேட்டில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. இதனால் வடமதுரை, ஒட்டன்சத்திரம், திண்டுக்கல், கரூர் ரோடு என நான்கு ரோடுகளிலும் வாகனங்கள் வரிசையில் நின்றன. போக்குவரத்து போலீசார் இல்லாத நிலையில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து தடைப்பட்டது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us