ADDED : ஜூன் 07, 2025 12:33 AM
நிலக்கோட்டை: நிலக்கோட்டையில் பிரமலைக்கள்ளர் கூட்டமைப்பு கூட்டம் மாநில பொருளாளர் இளங்கோ தலைமையில் நடந்தது. ஜார்ஜ் ஜோசப் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கப்பட்டது.
அரசு கள்ளர் பள்ளிகளில் உள்ள ஆசிரியர் பணி காலியிடங்களை உடனடியாக நிரப்ப வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி உறுதிமொழி எடுத்தனர். மாநில கொள்கை பரப்புச் செயலாளர் மாயாண்டி, அகில இந்திய பிரமலைக்கள்ளர், பழங்குடியினர் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் புத்தரசன், மாவட்ட செயலாளர் ஜெயராமன், மாநில மகளிர் அணி பொது செயலாளர் வசந்தி, மூத்த நிர்வாகிகள் மாயத்தேவர், பொன்னையா தேவர், பிச்சை, கூட்டமைப்பு மாவட்ட பொறுப்பாளர் சுப்பையா பங்கேற்றனர்.