ADDED : செப் 10, 2025 08:13 AM
திண்டுக்கல்; எவ்வித மாற்று ஏற்பாடுமின்றி அவசரகதியில் காலிமதுபாட்டில் திரும்பபெறும் திட்டம் அமல்படுத்தியிருப்பதாக கூறியும், பணி நிரத்திர தீர்ப்பு உத்தரவை அமல்படுத்திட கோரியும் சி.ஐ.டி.யு., திண்டுக்கல் மாவட்ட டாஸ்மாக் ஊழியர்கள் சங்கம் சார்பில் முள்ளிப்பாடி மாவட்ட டாஸ்மாக் மேலாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட தலைவர் மகாமுனி தலைமை வகித்தார். மாநிலக்குழு உறுப்பின்ர ராமு முன்னிலை வகித்தார்.
மாநில துணைச்செயலர் சீனிவாசன், சம்மேளன குழு உறுப்பினர் கோபால் ,சி.ஐ.டி.யு., மாவட்ட தலைவர் பாலசந்திரபோஸ், செயலாளர் ஜெயசீலன் பேசினர். நிர்வாகி திருமுருகன் நன்றி கூறினார்.