Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ கருப்பு சுவாமி கோயிலில் புரவி எடுப்பு

கருப்பு சுவாமி கோயிலில் புரவி எடுப்பு

கருப்பு சுவாமி கோயிலில் புரவி எடுப்பு

கருப்பு சுவாமி கோயிலில் புரவி எடுப்பு

ADDED : ஜூன் 01, 2025 03:59 AM


Google News
Latest Tamil News
நத்தம்: எல். வலையபட்டி சின்னகருப்பு சுவாமி, பெரியகருப்பு சுவாமி, நொண்டிகருப்பர், வீரன் சுவாமி, அய்யன் , சப்த கன்னிமார் சுவாமிகளின் புரவி எடுப்பு திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

இதையொட்டி நேற்று முன்தினம் இரவு வத்திபட்டியில் பிரதிஷ்டை செய்யப்பட்ட சுவாமி சிலைகள் கண் திறக்கப்பட்டு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை , பூஜை நடந்தது. தொடர்ந்து நேற்று மாலை சின்னகருப்பு சுவாமி, பெரியகருப்பு சுவாமி,நொண்டிகருப்பர், வீரன் சுவாமி, அய்யன், சப்த கன்னிமார், குதிரை, மதிலை சிலைகள் வர்ணக் குடைகளுடன் ஊர்வலமாக இருப்பிடம் போய் சேர்ந்தது.

ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை எல்.வலையபட்டி ஊர் கிராம மக்கள் செய்திருந்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us