ADDED : ஜூன் 18, 2025 04:31 AM
திண்டுக்கல்: திண்டுக்கல் கிழக்கு மாவட்ட சிவாஜி கணேசன் மன்றம் சார்பில் தேசபக்தர்கள் விஸ்வநாததாஸ், கக்கன் பிறந்ததினம், தேசபந்து சித்தரஞ்சன்தாஸ், வீர வாஞ்சிநாதன் நினைவுதினம் கடைப்பிடிக்கப்பட்டது.
மாவட்ட பொறுப்பாளர் சரவணன் தலைமையில் துணைத்தலைவர் சசிக்குமார் முன்னிலை வகித்தார். மாநகர் செயலாளர் சிவாஜி பத்மநாபன்பேசினார்.
கிழக்கு மாவட்ட செயலாளர் அருணகிரி நன்றி கூறினார். செயற்குழு உறுப்பினர் மகாலிங்கம், மாவட்ட காமராஜர் பேரவை நிறுவனர் வைரவேல் கலந்துகொண்டனர். செங்காட்டை குண்டாறு நீர்தேக்கத்துக்கு வீரவாஞ்சிநாதன் பெயரை சூட்ட வலியுறுத்தப்பட்டது.