ADDED : ஜூன் 08, 2025 05:01 AM
சின்னாளபட்டி : யோகா பயிற்சிகள் குறித்த தேசிய கருத்தரங்கு காந்திகிராம பல்கலையில் நடந்தது.
துணைவேந்தர் பஞ்சநதம் தலைமை வகித்தார். தமிழ்நாடு உடற்கல்வி, விளையாட்டு பல்கலை முன்னாள் துணைவேந்தர் ஏ.எம்.மூர்த்தி ஆலோசனை வழங்கினார்.
இந்திய யோகா சங்க நிர்வாகக்குழு உறுப்பினர் இளங்கோவன் ,சிதம்பரம் அண்ணாமலை பல்கலை யோகா மைய இயக்குனர் வெங்கடாஜலபதி ,பல்கலை சமூக அறிவியல் பள்ளி டீன் மணி, விளையாட்டு குழு தலைவர் பாலகிருஷ்ணன், மருத்துவக் கல்வி உதவி பேராசிரியர் கந்தசாமி பேசினர்.