/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/சுகாதாரமா... அப்படின்னா... கோம்பைபட்டி ஊராட்சியில் அவலம்சுகாதாரமா... அப்படின்னா... கோம்பைபட்டி ஊராட்சியில் அவலம்
சுகாதாரமா... அப்படின்னா... கோம்பைபட்டி ஊராட்சியில் அவலம்
சுகாதாரமா... அப்படின்னா... கோம்பைபட்டி ஊராட்சியில் அவலம்
சுகாதாரமா... அப்படின்னா... கோம்பைபட்டி ஊராட்சியில் அவலம்

புதர் மண்டி உள்ளது
எம்.முருகவேல், ராஜா நகர்: ராஜா நகரில் இரு தெருக்களை தவிர மற்ற தெருக்களில் சிமென்ட் தளம் அமைக்கவில்லை. சாக்கடை வடிகால் வசதி இல்லை. இதனால் உசிலம்பட்டி ரோட்டில் சாக்கடை நீர் ஓடி ரோடு சேதம் அடைகிறது. கிழக்கு தெருவில் மேடான பகுதியிலிருந்து பள்ளமான இடத்தில் வந்து கழிவு நீர் தேங்கி நிற்கிறது. ஊராட்சி நிர்வாகத்திடம் பல ஆண்டுகளாக வலியுறுத்தியும் சாக்கடை வசதி செய்து தரவில்லை. நிழற் குடையும் சேதமடைந்து கீழே விழும் நிலையில் புதர் மண்டி உள்ளது.
சிரமப்படுகிறோம்
சீனிவாசன், விவசாயி, கோம்பைபட்டி: இங்குள்ள இரண்டு மேல்நிலைத் தொட்டிகளில் பழுதடைந்த ஒரு தொட்டி இடிக்கப்பட்டது. ஒரு ஆண்டுபின் தற்போது தான் தொட்டி கட்டுவதற்கு பூமி பூஜை நடத்தி உள்ளனர். விரைவில் குடிநீர் தொட்டி அமைத்து குடிநீர் வினியோகத்தை சீர் செய்ய வேண்டும்.
சேதமான அறையில் ரேஷன்
தங்கப்பாண்டி, எலக்ட்ரீசியன், மேல கோவில்பட்டி: இந்திரா நகர் அம்பேத்கர் நகரில் இரு தெருவை தவிர மற்ற தெருக்களில் சிமென்ட் தளமோ, பேவர் பிளாக்கோ அமைக்கப்படவில்லை. தெருக்களில் கழிவு நீர் மழை நீர் தேங்கி விடுகிறது. இதனால் சுகாதாரம் கேள்வி குறியாக உள்ளது.
ரூ.1.25 கோடிக்கு பணிகள்
சூசைரெஜிரகு, ஒன்றிய கவுன்சிலர், மேலகோவில்பட்டி: ஒன்றிய கவுன்சில் நிதியிலிருந்து ரூ. 1.25 கோடிக்கு திட்ட பணிகள் செய்யப்பட்டுள்ளது. தார் ரோடு, சிமென்ட் தளம், மேல்நிலைப்பள்ளிக்கு புதிய கட்டடம் என ஊராட்சிக்கு தேவையான பணிகளை செய்துள்ளோம். அடுத்தடுத்து தெருக்களில் பேவர் பிளாக் அமைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.