ADDED : மே 31, 2025 12:57 AM
திண்டுக்கல்:திண்டுக்கல் மாவட்ட புவியியல் , சுரங்கத் துறை குழுவினர் திண்டுக்கல்- திருச்சி ரோட்டில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது எம்.எம்.கோவிலுார் பிரிவு அருகே குளத்துமண் ஏற்றி வந்த 2 டிராக்டர்களை தடுத்து நிறுத்தினர்.
டிரைவர்கள் தப்பினர். இதை தொடர்ந்து கனிமவளத்துறை அதிகாரிகள் மண்ணுடன் இருந்த 2 டிராக்டர்களை பறிமுதல் செய்து திண்டுக்கல் தாலுகா போலீசாரிடம் ஒப்படைத்தனர்.