Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ பழனி கோவிலுக்கான ரூ.100 கோடி நிலம் மீட்பு

பழனி கோவிலுக்கான ரூ.100 கோடி நிலம் மீட்பு

பழனி கோவிலுக்கான ரூ.100 கோடி நிலம் மீட்பு

பழனி கோவிலுக்கான ரூ.100 கோடி நிலம் மீட்பு

ADDED : செப் 13, 2025 02:06 AM


Google News
Latest Tamil News
பழனி:திண்டுக்கல் மாவட்டம், பழனி முருகன் கோவில் தண்டபாணி சுவாமி மடத்திற்கு சொந்தமான, 1.40 ஏக்கர் நிலம் பழனி ஆண்டவன் பூங்கா ரோடு, சன்னிதி வீதியை இணைக்கும் வகையில் உள்ளது. இந்த இடத்தில் முட்செடிகள் அடர்ந்து இருந்தன.

இதுகுறித்த வழக்கு பழனி சார்பு நீதிமன்றத்தில் நடந்த நிலையில், நீதிமன்ற உத்தரவின்படி, தண்டபாணி சுவாமிகள் மடத்திற்கு சொந்தமான நிலத்தை கோவில் இணை கமிஷனர் மாரிமுத்து தலைமையில் நேற்று சுத்தம் செய் து கையகப்படுத்தினர்.

இந்த நிலம், 60 ஆண்டுகளுக்கு பின் மீட்கப்பட்டுள்ளது. இதன் மதிப்பு, 100 கோடி ரூபாய். இங்கு அத்துமீறி நுழைபவர்கள் மீது சட்டப்படி குற்றவியல் நடவடிக்கை எடுக்கப் படும் என, கோவில் நிர்வாகம் எச்சரித்துள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us