Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ மழையால் முருங்கை சாகுபடி பாதிப்பு

மழையால் முருங்கை சாகுபடி பாதிப்பு

மழையால் முருங்கை சாகுபடி பாதிப்பு

மழையால் முருங்கை சாகுபடி பாதிப்பு

ADDED : மே 30, 2025 03:45 AM


Google News
ரெட்டியார்சத்திரம்: முருங்கை சாகுபடியில் பூக்கள் உதிர்வால் விவசாயிகள் மகசூல் பாதிப்பு விரக்தியில் உள்ளனர்.

சின்னாளபட்டி, பெருமாள்கோயில்பட்டி, அமலிநகர், நடுப்பட்டி, ரெட்டியார்சத்திரம் பகுதியில் குட்டத்துப்பட்டி, மாங்கரை, அம்மாபட்டி, வெயிலடிச்சான்பட்டி, மைலாப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் பலர், செடி முருங்கை சாகுபடியை மேற்கொண்டு வருகின்றனர்.

பலர் வெங்காயம், தக்காளி இடையே ஊடுபயிராக சாகுபடி செய்துள்ளனர். முருங்கைக்காய் சாகுபடியில் கடன் வாங்கி பல்வேறு பராமரிப்பு செலவுகளை மேற்கொண்டும் வருகின்றனர். பெரும்பாலான இடங்களில் பூக்கள் பெருகி காய் பிடிக்கும் நிலையில் உள்ளது.

இச்சூழலில் அவ்வப்போது சாரல் மழை, சூறாவளி காற்று வீசுவதால் முருங்கை பூ, காய்கள் உதிர்தல் அதிகரித்து வருகிறது.

வெயிலடிச்சான்பட்டி விவசாயி நல்லபாண்டி கூறுகையில், சமீபத்திய சூறைக்காற்று, சாரல் மழையால் வெகுவாக பூக்கள் உதிர துவங்கி உள்ளது.

மழை நேரங்களில் பூக்களுடன் காய்களும் சிறு மரங்களும் ஒடிந்து வீணாகிறது. மகசூலில் இப்பிரச்னை பாதிப்பு ஏற்படுத்த வாய்ப்புள்ளது '' என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us