ADDED : ஜன 28, 2024 06:05 AM
பழநி : சண்முக நதி அருகே செயல்பட்டு வரும் பாரத் வித்யா பவன் மேல்நிலைப்பள்ளி 27வது ஆண்டு விழா நடைபெற்றது. ஜன. 7ல் ஓய்வு எஸ்.பி., கலியமூர்த்தி, கோரிக்கடவு சி.ஜி.எம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஓய்வு தலைமை ஆசிரியர் சென்னிமலை கலந்து கொண்டனர்.
போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. தலைவர் வேலுச்சாமி, செயலர் குப்புசாமி, பள்ளி முதல்வர் லதா, துணை முதல்வர் நாகராஜன், நிர்வாக அதிகாரி சிவக்குமார் கலந்து கொண்டனர்.