Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/பஸ் ஸ்டாண்டை ஆக்கிரமிக்கும் தனியார் வாகனங்கள்

பஸ் ஸ்டாண்டை ஆக்கிரமிக்கும் தனியார் வாகனங்கள்

பஸ் ஸ்டாண்டை ஆக்கிரமிக்கும் தனியார் வாகனங்கள்

பஸ் ஸ்டாண்டை ஆக்கிரமிக்கும் தனியார் வாகனங்கள்

ADDED : ஜன 01, 2024 05:50 AM


Google News
Latest Tamil News
அதிகரிக்கும் வாகன இடையூறுகள்

திண்டுக்கல் பஸ்ஸ்டாண்டில் டூவீலர், கார்களின் ஆதிக்கம் அதிகமாக உள்ளதால் போக்குவரத்து பாதிப்பில் பயணிகள் அல்லாடுகின்றனர். வாகன ஸ்டாண்ட்களில் கார்களை நிறுத்தும் செலவை மிச்சப்படுத்தி பாதுகாப்பு நோக்கத்தோடு பஸ்ஸ்டாண்ட் வணிக நிறுவனங்களில் உள்ள கண்காணிப்பு கேமரா பார்வையில் டூவீலர், கார்களை நிறுத்தி விட்டு அருகிலுள்ள கடைகளுக்கு வாகன ஓட்டிகள் ஷாப்பிங் செல்வது வாடிக்கையாகிறது. பயணிகளுக்கு இடையூறு செய்யும் வகையில் வாகனங்களை நிறுத்துவோர் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நடவடிக்கை எடுக்கப்படும் பஸ்ஸ்டாண்டில் பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் அத்துமீறும் வாகனங்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். 24 மணி நேரமும் விழிப்புடன் பஸ்ஸ்டாண்ட்களில்

போலீசார் காவல் பணியில் ஈடுபட்டிருப்பதால் பொதுமக்களும் இது சம்மந்தமான புகார்கள், குறைகளை நேரடியாக தெரிவிக்கலாம்.

பிரதீப், எஸ்.பி., திண்டுக்கல்





      Our Apps Available On




      Dinamalar

      Follow us