/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/உலக நன்மை வேண்டி பிரத்தியங்கராதேவி யாகம்உலக நன்மை வேண்டி பிரத்தியங்கராதேவி யாகம்
உலக நன்மை வேண்டி பிரத்தியங்கராதேவி யாகம்
உலக நன்மை வேண்டி பிரத்தியங்கராதேவி யாகம்
உலக நன்மை வேண்டி பிரத்தியங்கராதேவி யாகம்
ADDED : பிப் 11, 2024 01:06 AM

கோபால்பட்டி: சாணார்பட்டி அருகே மேட்டுக்கடை மல்லத்தான்பாறை ஆதி பரஞ்சோதி சகலோக சபை மடத்தில் தை மாத அமாவாசை அன்று நடந்த பிரத்தியங்கிரா தேவி மிளகாய் யாகத்தை சபையின் நிர்வாகி திரு வேங்கட ஜோதி பட்டாச்சாரியார் செய்து வைத்தார். இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
இதையொட்டி காலை முதல் சபையில் வளர்க்கப்படும் 50க்கும் மேற்பட்ட பல்வேறு வகை நாட்டு மாடுகளுக்கு பக்தர்கள் அகத்திக்கீரை உணவுகள் வழங்க கோ பூஜை நடந்தது.
தொடர்ந்து மாலையில் யாகசாலையில் நரசிம்மர் கலசங்கள் பூக்களால் அலங்கரிக்க பிரத்தியங்கிரா தேவி அம்மன் பூக்கள் அலங்காரத்தில் எழுந்தருள சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.
சபையின் நிர்வாகி திருவேங்கட ஜோதி பட்டாச்சாரியார் வேத மந்திரம் முழங்க யாகுண்டத்தில் மூடை மூடையாக மிளகாய் வத்தலை கொட்ட உலக நன்மை வேண்டி பிரத்தியங்கிரா தேவி யாகம் நடத்தப்பட்டது. அன்னதானம் வழங்கப்பட்டது.