Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ பழனி கோவிலில் நாள் முழுதும் பிரசாதம்

பழனி கோவிலில் நாள் முழுதும் பிரசாதம்

பழனி கோவிலில் நாள் முழுதும் பிரசாதம்

பழனி கோவிலில் நாள் முழுதும் பிரசாதம்

ADDED : ஜூன் 30, 2025 02:53 AM


Google News
Latest Tamil News
பழனி: பழனி முருகன் கோவிலில் பக்தர்களுக்கு நாள் முழுதும் பிரசாதம் வழங்கும் திட்டம் நேற்று துவக்கப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம், பழனி முருகன் கோவிலில் நாள் முழுதும் அன்னதானம் வழங்கும் திட்டம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், நேற்று முதல் பழனி கோவில் வெளிப்பிரகாரத்தில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில், காலை 10:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கும் திட்டத்தை உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி துவக்கி வைத்தார்.

அமைச்சர் சக்கரபாணி கூறுகையில், “பக்தர்களுக்கு நாள் முழுதும் பிரசாதம் வழங்கும் திட்டம், தமிழகத்தில் 25 கோவில்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

“இதில், எலுமிச்சை, சாம்பார், தக்காளி, வெண்பொங்கல், தயிர் சாதங்கள் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றுடன் காய்கறி கூட்டு, பாக்கு மட்டை தட்டில் வழங்கப்படும். திட்டத்திற்கு ஆண்டுக்கு 4 கோடி ரூபாய் செலவு ஏற்படும்,” என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us