ADDED : ஜூன் 03, 2024 04:05 AM
மர்மமாக பெண் இறப்பு
வேடசந்துார்: வேடசந்துார் பாரதி நகரை சேர்ந்தவர் ஹிந்து முன்னணியின் மாவட்ட செயலாளர் மாரிமுத்து 38. இவரது மனைவி ரேவதி35. இருவரும் ஒட்டன்சத்திரம் வெரியப்பூர் பிரிவில் ஓட்டல் நடத்துகின்றனர். மாரிமுத்து வெளியூர் சென்ற நிலையில் ரேவதி வேடசந்துார் வீட்டில் தனியாக இருந்தார். மாரிமுத்துவின் வீட்டுக்கு தம்பி சந்தானம் சென்று கதவை தட்டினார். ஆனால் கதவு திறக்காததால் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அப்போது ரேவதி இறந்து கிடந்தார். வேடசந்துார் எஸ்.ஐ., பாண்டியன் விசாரிக்கிறார்.