/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ ஆக்கிரமிப்பால் வறண்டுபோன பண்ணியாமலை கல்லுகுளம் ஆக்கிரமிப்பால் வறண்டுபோன பண்ணியாமலை கல்லுகுளம்
ஆக்கிரமிப்பால் வறண்டுபோன பண்ணியாமலை கல்லுகுளம்
ஆக்கிரமிப்பால் வறண்டுபோன பண்ணியாமலை கல்லுகுளம்
ஆக்கிரமிப்பால் வறண்டுபோன பண்ணியாமலை கல்லுகுளம்

பாலைவனம் போல் காட்சி
எஸ்.செல்வம், ஓ.பி. எஸ். அணி ஒன்றிய செயலாளர், பண்ணியாமலை: மழைக்காலம் மட்டும் இன்றி கோடை காலத்திலும் கல்லுகுளம் தண்ணீர் நிறைந்து இருக்கும். இதனால் சுற்று பகுதி விவசாய நிலங்களில் நெல் விவசாயம் செய்யப்பட்டது. தற்போது போதுமான பராமரிப்பு, அரசு பொதுப்பணித்துறை கண்காணிப்பு இல்லாததால் குளத்தின் பெரும்பகுதி, நீரோடைகள் ஆக்கிரமிப்பின் பிடியில் உள்ளது. இதனால் நல்ல மழை பெய்தும் குளம் தண்ணீர் இன்றி பாலைவனம் போல் காட்சி அளிக்கிறது. இதனால் ஆவிச்சிபட்டி, சிறுகுடி, குட்டுப்பட்டி ஊராட்சி விவசாயிகள் விவசாயம் செய்ய முடியாமல் பாதிப்பை சந்திக்கும் நிலை உள்ளது.
வாழ்வாதாரத்துக்கு வழி காணுங்க
பூமி அம்பலம், விவசாயி, நத்தம் : நத்தம் பகுதியில் 60 சதவீதத்திற்கு மேற்பட்டோர் விவசாயத்தை மட்டுமே நம்பி உள்ளனர். இந்த பகுதியில் அணைகள் ,பெரிய ஆறுகள் இல்லாததால் கரந்த மலையில் இருந்து வரும் நீர் மூலம் நிரம்பும் குளம் தண்ணீர் ஆதாரத்தை நம்பியே விவசாயம் உள்ளது. நத்தம் பகுதியில் மழை இல்லாத காலத்தில் கூட கல்லு குளத்தில் தண்ணீர் நிறைந்திருக்கும். தற்போது குளத்தில் பராமரிப்பு இல்லாததால் குளம் வறண்டு காணப்படுகிறது.ஊராட்சி நிர்வாகம் 100 வேலை திட்ட பணியாளர்களை கொண்டாவது குளத்திற்கு வரும் நீர் வழி வாய்க்கால்களை சுத்தம் செய்து தண்ணீர் வர ஏற்பாடு செய்து, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்க வேண்டும்.
கவலை அடைய செய்கிறது
எஸ்.ராமேஸ்வரி, விவசாயி, பண்ணியாமலை: கல்லு குளத்தின் கரையில் தான் எங்களின் விவசாய நிலங்கள் உள்ளது. எங்கள் குடும்பம் பாரம்பரியமாக விவசாயத்தை மட்டுமே நம்பி உள்ளது. குளத்தில் தண்ணீர் இருந்ததால் நெல் உள்ளிட்ட பல்வேறு காய்கறி விவசாயங்களை செய்து வந்தோம்.நத்தம் பகுதியில் குறிப்பாக கரந்தமலை பகுதியில் மழை பெய்ததால் ஆறுகள் நீரோடைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. முறையான பராமரிப்பு இல்லாததால் கல்லுக்குளம் தண்ணீர் இன்றி விவசாயிகளை கவலை அடைய செய்துள்ளது. அரசு,பொதுப் பணித்துறை குளங்களை பராமரித்து தண்ணீர் தேக்க நடவடிக்கை எடுத்தால் மட்டுமே விவசாயத்தை காக்க முடியும் என்றார்.