Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ அலுவலகம் குடிபுகும் போராட்டம் வாபஸ்

அலுவலகம் குடிபுகும் போராட்டம் வாபஸ்

அலுவலகம் குடிபுகும் போராட்டம் வாபஸ்

அலுவலகம் குடிபுகும் போராட்டம் வாபஸ்

ADDED : மே 11, 2025 04:57 AM


Google News
குஜிலியம்பாறை : பாளையம் பேரூராட்சி நிர்வாகம் ஒப்பந்த முறை துப்புரவு தொழிலாளர் களான அஞ்சலை , பாலசுப்ரமணியன் இருவரையும் பணி நீக்கம் செய்தது. இருவரும் நீண்ட காலமாக பணிபுரிந்து வந்த நிலையில் அவர்களுக்கு மீண்டும் பணி வழங்க கோரி மார்க்சிஸ்ட் சார்பில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் முத்துச்சாமி தலைமையில் பேரூராட்சி அலுவலகத்தில் மே 13ல் குடிபுகும் போராட்டம் அறிவிக்கப்பட்டது. பாளையம் பேரூராட்சி தலைவர் பழனிச்சாமி, செயல் அலுவலர் ஹரி ராமமூர்த்தி, மார்க்சிஸ்ட் செயற்குழு உறுப்பினர் முத்துச்சாமி தலைமையில் பேச்சுவார்த்தை நடந்தது. இதை தொடர்ந்து துப்புரவு தொழிலாளி அஞ்சலை மே 10 முதல்துாய்மைப்பணி மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டது.

பாலசுப்பிரமணியத்துக்கு 1.6.25 முதல் பேரூராட்சியில் ஏதேனும் ஒரு தூய்மை பணி வழங்க முடிவு செய்யப்பட்டது. இதை தொடர்ந்து குடி புகும் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us