/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ காட்டு யானை நடமாட்டத்தால் அழிவின் விளிம்பில் மலை வாழை காட்டு யானை நடமாட்டத்தால் அழிவின் விளிம்பில் மலை வாழை
காட்டு யானை நடமாட்டத்தால் அழிவின் விளிம்பில் மலை வாழை
காட்டு யானை நடமாட்டத்தால் அழிவின் விளிம்பில் மலை வாழை
காட்டு யானை நடமாட்டத்தால் அழிவின் விளிம்பில் மலை வாழை
ADDED : செப் 10, 2025 08:06 AM

கொடைக்கானல் : கொடைக்கானல், தாண்டிக்குடி மலைப்பகுதியில் புவிசார் குறியீடு பெற்ற மலை வாழை காட்டு யானை நடமாட்டத்தால் அழிவின் விளிம்பிற்கு செல்கிறது.
தாண்டிக்குடி கீழ் மலைப் பகுதியில் மருத்துவ குணம் நிறைந்த மலைவாழைக்கு 2008ல் புவிசார் குறியீடு கிடைத்தது. விவசாயிகள் மலைவாழை உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுத்து வந்த நிலையில் இதற்கு முட்டுக்கட்டையாக முடிக்கொத்து நோய் ,காட்டு யானை நடமாட்டத்தால் விவசாயம் பரப்பு சுருங்க தொடங்கியது.விவசாயிகளுக்கு பெரும் தலைவலியாக இருப்பது காட்டு யானை நடமாட்டமே. புவிசார் குறியீடு தகுதி பெற்ற இம்மலை வாழை உற்பத்தியை அதிகரிக்க தோட்டக்கலைத்துறை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக வனத்துறையும் யானை நடமாட்டத்தை கட்டுப்படுத்தும் முயற்சியும் தோல்வியில் முடிந்துள்ளது. இது போன்ற பல்வேறு பிரச்னைகளால் ஆயிரம் கணக்கான ஏக்கர் பரப்பில் இருந்த மலை வாழை உற்பத்தி தற்போது சொற்ப எண்ணிக்கையிலான பரப்பில் சாகுபடி செய்யப்பட்டு அழிவின் விளிம்பில் உள்ளது. சில மாதங்களாக தாண்டிக்குடி மலை பகுதிகளில் முகாமிடும் யானைகளால் நாள்தோறும் விவசாய பயிர்கள் , மலைவாழை சேதமடைந்து வருகிறது. இதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஒழுங்குபடுத்த வேண்டும் அசோகன், விவசாயி: கொடைக்கானல் , தாண்டிக்குடி மலைப் பகுதியில் துவக்க காலகட்டத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் விவசாயிகளின் வாழ்வாதாரமாக வாழை விளங்கியது. மருத்துவ குணம் நிறைந்த இவ்வாழைக்கு மேலும் பெருமை சேர்க்கும் வகையில் புவிசார் குறியீடு பெற்ற அங்கீகாரமும் கிடைக்கப்பெற்றது. இருந்த போதும் சில ஆண்டுகளாக காட்டு யானை நடமாட்டத்தால் இவ்வாழை உற்பத்தி பாதிக்க தொடங்கியது. யானை நடமாட்டத்தால் விவசாயிகள் வாழை நடவு செய்ய முடியாத நிலையில் பின்தங்கினர். இதனால் ஏராளமான ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்ட மலை வாழை தற்போது குறைந்த ஏக்கரில் சாகுபடியாகி அழிவின் விளிம்பில் உள்ளது. விவசாயத்தை காக்க வனத்துறை யானை நடமாட்டத்தை ஒழுங்குபடுத்த வேண்டும். நோய் தாக்குதலை தவிர்க்கவும், பரப்பை அதிகரிக்க தோட்டக்கலைத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.