/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ அரசின் நலத்திட்டங்கள் மக்களை சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும் அமைச்சர் சக்கரபாணி பேச்சு அரசின் நலத்திட்டங்கள் மக்களை சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும் அமைச்சர் சக்கரபாணி பேச்சு
அரசின் நலத்திட்டங்கள் மக்களை சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும் அமைச்சர் சக்கரபாணி பேச்சு
அரசின் நலத்திட்டங்கள் மக்களை சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும் அமைச்சர் சக்கரபாணி பேச்சு
அரசின் நலத்திட்டங்கள் மக்களை சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும் அமைச்சர் சக்கரபாணி பேச்சு
ADDED : செப் 01, 2025 02:29 AM
ஒட்டன்சத்திரம்: 'அரசின் நலத்திட்ட உதவிகள் மக்களுக்கு சென்றடைவதை உறுதி செய்ய வேண்டுமென'அமைச்சர் சக்கரபாணி பேசினார்.
ஒட்டன்சத்திரத்தில் ஓரணியில் தமிழ்நாடு மண்டல அளவிலான ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
இதில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டசபை தொகுதிகள், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 4 சட்டசபை தொகுதிகள், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டசபை தொகுதிகள் நிர்வாகிகளுடன் அமைச்சர் சக்கரபாணி காணொளி காட்சி வாயிலாக ஆலோசனை நடத்தினார்.
தொடர்ந்து பேசியதாவது: வருகின்ற சட்டசபை தேர்தலில் நாம் அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டும்.
அரசின் நலத்திட்டங்கள் மக்களுக்கு சென்றடைவதை உறுதிப் படுத்த வேண்டிய இடத்தில் நாம் இருக்கிறோம். எனவே, அதனை ஒவ்வொருவரும் தமது கடமை போல் கருத வேண்டும் என்றார்.
தொகுதி பார்வையாளர் பரணிமணி, மாவட்ட அவைத்தலைவர் மோகன், துணைச் செயலாளர் ராஜாமணி, ஒன்றிய செயலாளர்கள் ஜோதீஸ்வரன், தர்மராஜ், பாலு சுப்பிரமணி, பொன்ராஜ், தங்கம் தலைமை செயற்குழு உறுப்பினர் கண்ணன், நகராட்சி தலைவர் திருமலைசாமி, மகளிர் அணி அமைப்பாளர் மலர்விழி செல்வி, இளைஞரணி அமைப்பாளர் ஹரிஹரன், தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள் செல்வராஜ், வெங்கிடுசாமி கலந்து கொண்டனர்.