Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ கோயில்களில் அஷ்டமி வழிபாடு

கோயில்களில் அஷ்டமி வழிபாடு

கோயில்களில் அஷ்டமி வழிபாடு

கோயில்களில் அஷ்டமி வழிபாடு

ADDED : செப் 01, 2025 02:29 AM


Google News
சின்னாளபட்டி: அஷ்டமியை முன்னிட்டு கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடந்தது.

சின்னாளபட்டி அஞ்சலி வரத ஆஞ்சநேயர் கோயிலில், சிறப்பு பூஜை நடந்தது.

மூலவருக்கு திரவிய அபிஷேகத்துடன், சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. அஷ்டோத்திர பூஜை, மகா தீபாராதனை நடந்தது.

செம்பட்டி : கோதண்டராமர் கோயில், கசவனம்பட்டி மவுனகுரு சுவாமி கோயிலில், சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது.

நத்தம் : குட்டூர் உண்ணாமுலை அம்பாள் உடனுறை அண்ணாமலையார் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது. இதையொட்டி சுவாமிக்கு பால், பழம், இளநீர், சந்தனம், திருமஞ்சனம், பன்னீர் உள்ளிட்ட 16 வகையான அபிஷேகங்களும், அலங்காரமும், தீபாராதனைகளும் நடந்தது. ஏராளமான பக்தர்கள் விளக்கேற்றி தரிசனம் செய்தனர். இதைப்போலவே கோவில்பட்டி கைலாசநாதர் கோயில் கால பைரவர் சன்னதியில் வளர்பிறை அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. இங்கும் பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us