ADDED : ஜன 11, 2024 04:30 AM

நத்தம், : நத்தம் சேத்துாரில் பூர்ணபுஷ்பகலா சமேத திருவேட்டை அய்யனார், தொட்டிச்சி,சின்னம்மாள் கோவில்களில் கடந்த வருடம் நவ.23ல் கும்பாபிஷேக விழா நடந்தது.
இதை தொடர்ந்து நேற்று 48-ம் நாள் மண்டல பூஜை நடந்தது. இதையொட்டி கோவில் முன்பு யாகசாலை அமைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து சுவாமிகளுக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அன்னதானம் வழங்கபட்டது.