Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ கூலி தொழிலாளி பலி: 2 மணி நேரம் ரோட்டில் கிடந்த உடல்

கூலி தொழிலாளி பலி: 2 மணி நேரம் ரோட்டில் கிடந்த உடல்

கூலி தொழிலாளி பலி: 2 மணி நேரம் ரோட்டில் கிடந்த உடல்

கூலி தொழிலாளி பலி: 2 மணி நேரம் ரோட்டில் கிடந்த உடல்

ADDED : மே 23, 2025 04:20 AM


Google News
தாண்டிக்குடி: - தாண்டிக்குடியில் கூலித்தொழிலாளி மாரடைப்பால் இறந்த நிலையில் அவரது உடல் 2 மணி நேரம் ரோட்டில் கிடந்த மனிதாபிமானமற்ற செயல் நடந்தது.

மேற்குவங்கம் ஹவூராவை சேர்ந்தவர் ஷ்யாம்மூர்த்தி 52, தாண்டிக்குடியில் உள்ள தனியார் தோட்டத்தில் காவலாளியாக உள்ளார். நேற்று மதியம் டீக்கடை சென்று திரும்பியவர் மாரடைப்பால் இறந்தார்.

மருத்துவமனையில் பிண அறை வசதி இல்லாத நிலையில் 2 மணி நேரம் உடல் ரோட்டிலே கிடந்தது. இதன்பின் போலீசார் வர திண்டுக்கல் அனுப்பப்பட்டது. தாண்டிக்குடி போலீசார் விசாரித்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us