ADDED : ஜன 11, 2024 04:48 AM
வேடசந்துார் : வேடசந்தூர் ஆத்து மேட்டில் இரு தினங்களுக்கு முன்பு அங்குராஜ் பாத்திரக் கடையின்பூட்டை உடைத்து ஆறரை பவுன் நகை, ரூ.10 ஆயிரம், அருகில் உள்ள வாகனங்களை எடை பார்க்கும் அலுவலகத்தில் நுழைந்து ரூ.3 ஆயிரம் திருடு போனது.
சாலையூர் நால்ரோடு பகுதியில் சுற்றித்திரிந்த நபரிடம் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் விசாரித்தார். மேட்டுப்பாளையத்தை சேர்ந்த கோபால் 51, என்பதும் நகை, பணம் திருடியது தெரிந்தது. எஸ்.ஐ., வேலுமணி விசாரிக்கிறார்.