/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/டூவீலர் ஓட்டிகளிடம் செயின், போன் பறிப்பு அதிகரிப்பு; மாட்டுத்தொழுவமாக மாறிய நான்கு வழிச்சாலை சென்டர்மீடியன்டூவீலர் ஓட்டிகளிடம் செயின், போன் பறிப்பு அதிகரிப்பு; மாட்டுத்தொழுவமாக மாறிய நான்கு வழிச்சாலை சென்டர்மீடியன்
டூவீலர் ஓட்டிகளிடம் செயின், போன் பறிப்பு அதிகரிப்பு; மாட்டுத்தொழுவமாக மாறிய நான்கு வழிச்சாலை சென்டர்மீடியன்
டூவீலர் ஓட்டிகளிடம் செயின், போன் பறிப்பு அதிகரிப்பு; மாட்டுத்தொழுவமாக மாறிய நான்கு வழிச்சாலை சென்டர்மீடியன்
டூவீலர் ஓட்டிகளிடம் செயின், போன் பறிப்பு அதிகரிப்பு; மாட்டுத்தொழுவமாக மாறிய நான்கு வழிச்சாலை சென்டர்மீடியன்

வசூலில் மட்டுமே கவனம்
மனோகரன், பா.ஜ., ஆத்தூர் வடக்கு ஒன்றிய பொதுச்செயலாளர், பெருமாள்கோயில்பட்டி : திண்டுக்கல் கொடைரோடு இடையே போலீசார் ரோந்து செல்கின்றனர். இதனை கவனித்து வழிபறிப்பு சம்பவங்களில் ஈடுபடும் மர்ம கும்பல் தங்களது இடத்தை தேர்வு செய்கின்றனர். கொடைரோடு முதல் தோமையார்புரம் வரை, அம்மையநாயக்கனுார், அம்பாத்துறை, சின்னாளப்பட்டி, திண்டுக்கல் தாலுகா போலீசாரின் கட்டுப்பாட்டு பகுதிகள் அமைந்துள்ளன. இவற்றில் முறையான வாகன தணிக்கை நடைபெறுவதில்லை.
---கண்காணிப்பு கேமரா தேவை
துரைப்பாண்டி,டிராவல்ஸ் உரிமையாளர், சின்னாளபட்டி : திண்டுக்கல்-மதுரை ரோட்டில் சமீபகாலமாக செயின், அலைபேசி சம்பவங்களில் பாதிப்படைவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அண்ணாமலையார் மில்ஸ், கலிக்கம்பட்டி விலக்கு, சின்னாளபட்டி, அம்பாத்துறை ரோடு, காமலாபுரம், சிறுநாயக்கன்பட்டி விலக்கு, காபிகடை உள்ளிட்ட இணைப்பு சாலைகளை பயன்படுத்தி பறிப்பு சம்பவங்களில் ஈடுபடுவோர் தப்பி விடுகின்றனர். இச்சம்பவங்கள் தொடர்பான உடனடி தகவல்களை தெரிவிக்கும் வகையில் ரோடு சந்திப்புகள் விழிப்புணர்வு பலகைகள் அமைக்க வேண்டும். பெரும்பாலான இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் செயல்பாடின்றி காட்சி பொருளாக உள்ளன. இவை குற்றச் செயல்களில் ஈடுபடுபவருக்கு ஏதுவாக அமைந்து விடுகிறது. போலீஸ், நெடுஞ்சாலை ஆணையம் துறையினர் சார்பில் முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்களை அமைக்க வேண்டும். பகல், நள்ளிரவு நேரங்களில் ரோந்து, வாகன தணிக்கையில் கடும் தொய்வு நிலவுகிறது. ஏ.வெள்ளோடு, காந்திகிராமம், செட்டியபட்டி, கலிக்கம்பட்டி, அம்பாத்துறை, ஜம்புதுரைக்கோட்டை உள்ளிட்ட ஊராட்சிகள், அம்மையநாயக்கனூர் பேரூராட்சி நிர்வாகத்தினர் மெயின் ரோடுகள் சந்திப்புகளில் உள்ள தெருவிளக்குகளை பராமரிப்பதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
இருளால் அவதி
பூங்காவனம், குடும்பத்தலைவி, சின்னாளபட்டி: