Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ 'கொடை' பூங்காக்களில் முழுமை பெறாத வளாகச் சுவர்கள்; காட்டு மாடு நடமாட்டத்தால் பயணிகள் அச்சம்

'கொடை' பூங்காக்களில் முழுமை பெறாத வளாகச் சுவர்கள்; காட்டு மாடு நடமாட்டத்தால் பயணிகள் அச்சம்

'கொடை' பூங்காக்களில் முழுமை பெறாத வளாகச் சுவர்கள்; காட்டு மாடு நடமாட்டத்தால் பயணிகள் அச்சம்

'கொடை' பூங்காக்களில் முழுமை பெறாத வளாகச் சுவர்கள்; காட்டு மாடு நடமாட்டத்தால் பயணிகள் அச்சம்

ADDED : செப் 22, 2025 03:41 AM


Google News
Latest Tamil News
கொடைக்கானல் : கொடைக்கானல் பிரையன்ட் பூங்கா மற்றும் செட்டியார் பூங்கா வளாக சுவர் சேதமடைந்து காட்டுமாடு புகுவதால் சுற்றுலா பயணிகள் அச்சமடைந்துள்ளனர்.

தோட்டக்கலைத்துறை கட்டுப்பாட்டிலுள்ள கொடைக்கானல் பிரையன்ட் பூங்காவிற்கு நாள்தோறும் ஏராளமான பயணிகள் வருகின்றனர்.

10 ஏக்கர் பரப்பிலுள்ள பூங்காவில் மலர்படுகைகள் அமைத்து பூக்கள் பூத்து குலுங்கின்றன. ஆண்டுதோறும் மலர் கண்காட்சியும் நடப்பதால் அதிக வருவாய் ஈட்டும் பூங்காவாக உள்ளது. பயணிகள் நுழைவு கட்டணம் செலுத்தி பூங்காவை ரசித்து இளைப்பாறுகின்றனர்.

இந்நிலையில் பூங்காவை சுற்றி வளாக சுவர் உள்ள நிலையில் ஆங்காங்கே சேதமடைந்து சீரமைக்கபடாமல் நிழல் வலை அமைப்பு மூலம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

இதன் வழியே எளிதில் காட்டுமாடுகள் புகுந்து பயணிகளை காட்டுமாடுகள் அச்சுறுத்திகிறது. நேற்று முன்தினம் காட்டு மாடு புகுந்து பயணிகள் அலறியடித்து ஓடினர். மேலும், மலர்படுகைகள் சேதமடைந்து பூங்கா மலர் கட்டமைப்பு சிதிலமடைந்து வருகிறது.

ஏராளமான பயணிகள் வரும் பூங்காவில் காட்டுமாடு, காட்டுபன்றி அச்சுறுத்தல் தொடர்கிறது. இந்நிலை செட்டியார் பூங்காவிலும் தொடர்கிறது. பயணிகளின் பாதுகாப்பு கருதி வளாகச் சுவரை கட்டமைக்க தோட்டக் கலைத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us