Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ 'கொடை' யில் பனிமூட்டத்துடன் சாரல் மழை

'கொடை' யில் பனிமூட்டத்துடன் சாரல் மழை

'கொடை' யில் பனிமூட்டத்துடன் சாரல் மழை

'கொடை' யில் பனிமூட்டத்துடன் சாரல் மழை

ADDED : ஜூன் 15, 2025 02:25 AM


Google News
Latest Tamil News
கொடைக்கானல்:கொடைக்கானலில் சாரல் மழையுடன் பனிமூட்டம் நிலவியதை சுற்றுலா பயணிகள் ரசித்தனர்.

கொடைக்கானலில் நேற்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. தொடர்ந்து தரை இறங்கிய மேகக் கூட்டம், சாரல் மழை என ரம்யமான சூழல் நிலவியது. மலைமுகடுகளை சூழ்ந்த பனிமூட்டம் நகரையும் சூழ வாகனங்கள் முகப்பு விளக்கை எரிய விட்டு சென்றன. தொடர்ந்து சாரல் மழை பெய்த நிலையில் மழையில் நனைந்தபடி சுற்றுலா தலங்களை பயணிகள் ரசித்தனர். ஏரிச்சாலையில் குதிரை, சைக்கிள் சவாரி , ஏரியில் பனிமூட்டத்திற்கிடையே படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். காற்றில் ஈரப்பதம் அதிகரித்து குளிர் நிலவியது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us