Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ பழநியில் தங்க ரதபுறப்பாடு

பழநியில் தங்க ரதபுறப்பாடு

பழநியில் தங்க ரதபுறப்பாடு

பழநியில் தங்க ரதபுறப்பாடு

ADDED : செப் 13, 2025 02:24 AM


Google News
Latest Tamil News
பழநி:பழநி முருகன் கோயிலில் நேற்று ஆவணிமாத கார்த்திகையை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

இதையொட்டி அதிகாலை 4:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு மூலவருக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகம், ஆறு கால பூஜை நடந்தது. பக்தர்கள் படிப்பாதை, வின்ச், ரோப்கார் மூலம் கோயில் சென்றனர். அதிக கூட்டத்தால் குடமுழுக்கு மண்டபம் வழியாக மலை கோயில் செல்ல படிப்பாதையில் அனுமதிக்கப்பட்டனர். சில மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

மாலையில் திருக்கல்யாண மண்டபத்தில் விளக்கு பூஜை, சாயரட்சை பூஜைக்கு பின் தங்கமயில் வாகனத்தில் சின்ன குமாரசுவாமி புறப்பாடு நடந்தது. வெளி பிரகாரத்தில் தங்கரத புறப்பாட்டில் சுவாமி எழுந்தருளினார். இதில் ஏராளமானோர் தரிசித்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us