Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ பழநியில் அறுபடைவீடு பக்தர்கள் சுவாமி தரிசனம்

பழநியில் அறுபடைவீடு பக்தர்கள் சுவாமி தரிசனம்

பழநியில் அறுபடைவீடு பக்தர்கள் சுவாமி தரிசனம்

பழநியில் அறுபடைவீடு பக்தர்கள் சுவாமி தரிசனம்

ADDED : செப் 11, 2025 05:35 AM


Google News
பழநி : காஞ்சிபுரத்திலிருந்து 100 , வேலுாரில் இருந்து 100 பக்தர்கள் என இரண்டு மண்டலங்களை சேர்ந்த 200 பக்தர்கள் ஹிந்து சமய அறநிலை துறை சார்பில் அறுபடைவீடு ஆன்மிக சுற்றுப்பயணத்தை செப். 9 ல் துவங்கினர்.

திருத்தணியில் சுவாமி தரிசனம் செய்தபின் சிறுவாச்சூர் மதுர காளியம்மன், சமயபுரம் மாரியம்மன் கோயிலில் தரிசனம் முடித்து பழநிக்கு வந்தனர்.இவர்களுக்கு பழநி கோயில் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள விடுதிகளில் அறை , உணவு வசதிகள் செய்து தரப் பட்டன. நேற்று காலை 7:00 மணிக்கு முருகன் கோயிலில் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். அதன்பின் மதுரை சோலைமலை முருகன் கோயில், அழகர் கோயில்களில் தரிசனம் செய்தனர்.செப்.12 ல் திருச்செந்தூரில் சுவாமி தரிசனம் செய்ய உள்ளனர். அதன் பின் மதுரை திருப்பரங்குன்றம் கோயிலுக்கு தரிசனம் செய்ய செய்தப்படி செப்.13 ல் சுவாமி மலை செல்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us