ADDED : செப் 15, 2025 04:23 AM
பழநி : பழநி முருகன் கோயிலில் விடுமுறை தினத்தை முன்னிட்டு ஏராளமான வெளிமாநில, மாவட்ட பக்தர்கள் குவிந்தனர்.
கோயிலுக்கு செல்ல பக்தர்கள், ரோப் கார்,வின்சில் பல மணி நேரம் காத்திருந்தனர். கோயிலில் பொது மற்றும் கட்டண தரிசன வரிசையில் 3 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர். கிரி வீதியில் செல்லும் பக்தர்கள் வெயிலின் தாக்கம் தாங்காமல் சிரமப் பட்டனர். மீண்டும் சொந்த ஊர்களுக்கு திரும்பி செல்ல போதுமான பஸ் வசதி இல்லாமல் சிரமம் அடைந்தனர்.