Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/தெரு நாய்கள் தொல்லை கவுன்சிலர்கள் புகார்

தெரு நாய்கள் தொல்லை கவுன்சிலர்கள் புகார்

தெரு நாய்கள் தொல்லை கவுன்சிலர்கள் புகார்

தெரு நாய்கள் தொல்லை கவுன்சிலர்கள் புகார்

ADDED : ஜன 13, 2024 04:02 AM


Google News
ஒட்டன்சத்திரம் : ஒட்டன்சத்திரம் நகராட்சியில் தெரு நாய்கள் தொல்லை அதிகரித்திருப்பதாக கவுன்சிலர்கள் புகார் தெரிவித்தனர்.

ஒட்டன்சத்திரம் நகராட்சி கூட்டம் தலைவர் திருமலைசாமி (தி.மு.க.,) தலைமையில் நடந்தது துணைத்தலைவர் வெள்ளைச்சாமி (தி.மு.க.,) கமிஷனர் கணேஷ் முன்னிலை வகித்தனர்.

கவுன்சிலர்கள் விவாதம்:

பழனிச்சாமி (தி.மு.க.,), ஜெயமணி (தி.மு.க.), அழகேஸ்வரி (தி.மு.க.,): நகராட்சி பகுதியில் தெரு நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும்.

ராஜமோகன் (துப்புரவு ஆய்வாளர்) : விலங்குகள் நல வாரியத்திடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும்

ஜெயமணி(தி.மு.க.): தெருக்களின் சந்திப்புக்களில் கூடுதல் தெருவிளக்குகள் அமைக்க பலமுறை வலியுறுத்தியும் நடவடிக்கை இல்லை

முகமது மீரான் (காங்.,): தெரு விளக்குகளின் வெளிச்சம் குறைவாக உள்ளது. அதிக ஒளி தரும் விளக்குகளை பொருத்த வேண்டும்

கமிஷனர்: நடவடிக்கை எடுக்கப்படும்.

ஜெயமணி (தி.மு.க.), : வார்டு அடிப்படைப் பிரச்னைகள் குறித்து தெரிவித்த பின்பும் நிறைவேற்ற தாமதம் ஆகிறது.

தலைவர்: வார்டு பிரச்னைகளை நிவர்த்தி செய்ய செல்லும்போது சம்பந்தப்பட்ட கவுன்சிலர்களிடம் தெரிவிக்க வேண்டும்.

முகமது மீரான் (காங்.,) : திண்டுக்கல் பழநி ரோட்டில் தெற்கு பகுதியில் பேட்டரி வண்டி மூலம் குப்பை அள்ளுவதே கிடையாது.

அழகேஸ்வரி (தி.மு.க.,): வ.உ.சி.நகரில் குப்பையை அகற்ற தாமதமாவதால் நாய்கள் அதிகமாக சுற்றித் திரிகின்றன.

ராஜமோகன் (துப்புரவு ஆய்வாளர்): துாய்மை பணியாளர்களில் ஐந்து பேர் நீண்ட விடுப்பில் உள்ளதால் தாமதமாகிறது. நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

பழநி பாதயாத்திரை பக்தர்களுக்கு அடிப்படைகள் வசதிகள் செய்து தருவதற்கு ரூ.5 லட்சத்திற்கான தீர்மானம் உட்பட 51 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us