ADDED : மார் 23, 2025 06:43 AM
வடமதுரை : திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையை சேர்ந்த கிருஷ்ணபிரசாத் 33, காரில் திண்டுக்கல் திருச்சி நான்குவழிச்சாலையில் சென்றபோது வடமதுரை நால்ரோடு பிரிவு பகுதியில் கெச்சானிபட்டி கட்டட தொழிலாளி பிரேம்குமார் 18 .
ஓட்டி சென்ற டூவீலர் மீது மோதியது.
கட்டுப்பாட்டை இழந்த கார் ரோட்டோர மண் மேட்டில் மோதி உயரமாக பறந்து சென்று விழுந்தது.
பிரேம்குமார், டூவீலரில் உடன் சென்ற மீனா 33, காரில் இருந்த கிருஷ்ணபிரசாத் மனைவி சண்முகப்பிரியா காயமடைந்தனர். வடமதுரை போலீசார் விசாரிக்கின்றனர்.