Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ பா.ஜ., பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

பா.ஜ., பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

பா.ஜ., பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

பா.ஜ., பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

ADDED : செப் 22, 2025 03:50 AM


Google News
திண்டுக்கல் : திண்டுக்கல், தேனி மாவட்டங்கள் உள்பட மதுரை மண்டலத்தில் 21 சட்டசபை தொகுதிகளுக்கான பா.ஜ., பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் திண்டுக்கல் அங்குவிலாஸ் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நேற்று நடந்தது.

கூட்டத்துக்கு, மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமை வகித்து பேசினார். தேசிய பொறுப்பாளர் அரவிந்த் மேனன், மாநில இணைப்பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகம், மாநிலத் துணை தலைவர் ஜெயபிரகாஷ், முன்னாள் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், முன்னாள் மாநிலத்தலைவர் தமிழிசை, தேசிய மகளிர் அணி தலைவி வானதி, மாநில பொதுச்செயலாளர் ராமசீனிவாசன், மாநில செயலாளர் கதலி நரசிங்க பெருமாள் முன்னிலை வகித்தனர். திண்டுக்கல் கிழக்கு மாவட்ட தலைவர் முத்துராமலிங்கம் வரவேற்றார்.

சமூக ஊடக பிரிவு மாநில துணைத்தலைவர் ஆனந்த கிருஷ்ணன், மாவட்ட தலைவர்கள் ஜெயபாண்டி, ஜெயராமன், ராஜசிம்மன், மாரிசக்கரவர்த்தி, சிவலிங்கம், மாவட்ட பொருளாளர் கருப்புசாமி, மாவட்ட பொதுச்செயலாளர்கள் சந்திரசேகர், ஆனந்தி, முத்துக்குமார், முன்னாள் மாவட்ட தலைவர்கள் தனபாலன், கனகராஜ், ஊடகப்பிரிவு பொறுப்பாளர் பாலசித்தன் கலந்து கொண்டனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us