ADDED : செப் 02, 2025 05:56 AM
சின்னாளபட்டி : சின்னாளபட்டி விக்டரி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, சக்தி வேலவன் வித்யாலயா பள்ளி சார்பில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு சைக்கிள் ஊர்வலம் நடந்தது.
தாளாளர் ரவீந்திரன் தலைமை வகித்தார். முதல்வர் மலர்விழி வரவேற்றார். ஏ.டி.எஸ்.பி., தெய்வம் துவக்கி வைத்தார். பள்ளி வளாகத்தில் துவங்கி, அஞ்சுகம் காலனி, ஜே.புதுக்கோட்டை, ஆதிலட்சுமிபுரம் வழியே ஆத்துார் தாலுகா அலுவலகம் வரை ஊர்வலம் நடந்தது. துணை தாசில்தார் பிரவீனா, சின்னாளபட்டி பேரூராட்சி தலைவர் பிரதீபா, லயன்ஸ் பள்ளி தலைமையாசிரியர் தேவி, அறக்கட்டளை நிர்வாகி ஹரிஷ்வர்த்தனவிக்னேஷ், அகத்தியவிக்னேஷ் பங்கேற்றனர்.
-