ADDED : ஜூன் 27, 2025 12:48 AM
ஒட்டன்சத்திரம்:ஒட்டன்சத்திரத்தில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலம் சக்தி மகளிர் கல்லுாரி,பழநியாண்டவர் மகளிர் கல்லுாரி, போலீசார் சார்பில் நடந்தது. டி.எஸ்.பி., கார்த்திகேயன் துவக்கி வைத்தார். பஸ் ஸ்டாண்டில் தொடங்கிய ஊர்வலம் தாராபுரம் ரோடு, மார்க்கெட் பைபாஸ் ரோடு, திருவள்ளுவர் சாலை வழியாக போலீஸ் ஸ்டேஷனை சென்றடைந்தது.
இன்ஸ்பெக்டர் தங்கராஜ், சக்தி கல்லுாரி முதல்வர் தேன்மொழி, பழநி ஆண்டவர் கல்லுாரி முதல்வர் வாசுகி, உதவி பேராசிரியர்கள் நந்தினி, சத்திய ஜோதி, அமுதப்பிரியா கலந்து கொண்டனர்.