இணைய வழிக்கு மாறியும் தீராத தொல்லை
இணைய வழிக்கு மாறியும் தீராத தொல்லை
இணைய வழிக்கு மாறியும் தீராத தொல்லை

இடைத்தரகர்கள் ஆதிக்கம்
அய்யாத்துரை, ஹிந்து முன்னணி, சேடபட்டி: மக்களின் அலைக்கழிப்பு தவிர்க்கவும் லஞ்சத்தை ஒழிக்கவும் அரசு துறையின் மூலம் மேற்கொள்ளப்படும் பணிகள் இணையமயமாக்கப்பட்டு வருகிறது. ஆனால் இவற்றை முடக்குவதில் அதிகாரிகள் ஆர்வம் காட்டுகின்றனர்.
முடக்கும் அதிகாரிகள்
பொன்ராஜ், சமூக ஆர்வலர், கன்னிவாடி: ஊராட்சிகளில் 10 ஆண்டுகளுக்கு முன் வேலை உறுதித் திட்ட நிதியின் மூலம் சேவை மையங்களுக்கென பல லட்சம் மதிப்பிலான கட்டடங்கள் உருவாக்கப்பட்டன. இவற்றுக்கான உபகரணங்கள் வழங்கப்பட்ட போதும் செயல்பாடின்றி முடக்கி வைத்துள்ளனர். பல சேவை மைய கட்டடங்கள், சமூக விரோத செயல்களுக்கு பயன்படுத்தப்படுகின்றன. கூட்டுறவு சேவை மையங்களில் ஆட்கள் இருந்த போதும் பிற பணிகளுக்கு பயன்படுத்துவதால் விண்ணப்ப காரணங்களுக்காக வரும் பயனாளிகளை அலைக்கழிக்கின்றனர். பணியாளர் பற்றாக்குறையை கூறி சரியான நேரத்தில் அலுவலகத்தை திறப்பதில்லை.