Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ பா.ஜ., கூட்டணியால் அ.தி.மு.க., பலவீனமடையும் : சொல்கிறார் திருமாவளவன்

பா.ஜ., கூட்டணியால் அ.தி.மு.க., பலவீனமடையும் : சொல்கிறார் திருமாவளவன்

பா.ஜ., கூட்டணியால் அ.தி.மு.க., பலவீனமடையும் : சொல்கிறார் திருமாவளவன்

பா.ஜ., கூட்டணியால் அ.தி.மு.க., பலவீனமடையும் : சொல்கிறார் திருமாவளவன்

ADDED : ஜூன் 08, 2025 01:13 AM


Google News
கொடைக்கானல்:''பா.ஜ.,வுடன் கூட்டணி வைத்துள்ள அ.தி.மு.க., பலவீனமடையும்'' என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.

கொடைக்கானலில் அவர் கூறியதாவது:

மத்திய அரசின் வக்ப் வாரிய திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி திருச்சியில் ஜூன் 14 ல் வி.சி.க., சார்பில் பேரணி நடக்க உள்ளது. பா.ஜ., மாநிலத்திற்கு, மாநிலம் அவதாரத்தை மாற்றுகிறது. மதுரையில் முருகன் மாநாடு அவதாரம் எடுத்துள்ளது. தமிழக அரசியலில் அது எடுபடாது. மின்னணு ஓட்டு இயந்திரத்தை பயன்படுத்தி பா.ஜ., வடமாநிலங்களில் சூதாடுகிறது. இந்த உண்மை விரைவில் வெளிச்சத்திற்கு வரவுள்ளது. தமிழகத்தில் அது போன்று நடத்த வாய்ப்பில்லை.

பா.ஜ., வுடன் கூட்டணி வைக்கும் கட்சிகள் அழிக்கப்படுகிறது. தமிழகத்தில் அ.தி.மு.க., வுடன் கூட்டணி வைத்து அதன் வாக்கு வங்கியை பயன்படுத்தி தனது வாக்கு வங்கி எனக் கூறி அக்கட்சியை பா.ஜ., பலவீனமடையச் செய்யும். இவ்வாறு அவர் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us