Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/அமலாக்கத்துறை மனு மீண்டும் ஒத்திவைப்பு

அமலாக்கத்துறை மனு மீண்டும் ஒத்திவைப்பு

அமலாக்கத்துறை மனு மீண்டும் ஒத்திவைப்பு

அமலாக்கத்துறை மனு மீண்டும் ஒத்திவைப்பு

ADDED : ஜன 10, 2024 11:45 PM


Google News
திண்டுக்கல்:லஞ்ச வழக்கில் கைதான மதுரை அதிகாரியை விசாரிக்க அனுமதி கோரி அமலாக்கத்துறை தாக்கல் செய்த மனுவை ஜன.12க்கு (நாளை) திண்டுக்கல் நீதிமன்றம் ஒத்திவைத்தது.

திண்டுக்கல் அரசு மருத்துவமனை துணை கண்காணிப்பாளர் டாக்டர் சுரேஷ்பாபுவை, சொத்துகுவிப்பு வழக்கிலிருந்து விடுவிப்பதாக கூறி ரூ.40 லட்சம் லஞ்சம் வாங்கிய மதுரை அமலாக்கத்துறை அதிகாரி அங்கித்திவாரி, தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டார். மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்ட அவரை வழக்கு தொடர்பாக விசாரிக்க அமலாக்கத்துறை சார்பில் திண்டுக்கல் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் மனு செய்யப்பட்டது.

ஜன.5ல் விசாரிக்கப்பட்ட இம்மனு ஜன.9க்கு ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் ஜன.11க்கு ஒத்தி வைக்கப்பட்டது. நேற்று இம்மனு நீதித்துறை நடுவர் மோகனா முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அமலாக்கத்துறை வழக்கறிஞர் சார்பில் அங்கித்திவாரியிடம் விசாரணைக்கு அனுமதிகேட்ட நிலையில், தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் தரப்பு வழக்கறிஞர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். இதையடுத்து விசாரணையை மீண்டும் நாளைக்கு ஒத்திவைத்து நடுவர் உத்தரவிட்டார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us