/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ தாயுமானவர் திட்டத்தில் 20 லட்சம் பயனாளிகள்: அமைச்சர் சக்கரபாணி தாயுமானவர் திட்டத்தில் 20 லட்சம் பயனாளிகள்: அமைச்சர் சக்கரபாணி
தாயுமானவர் திட்டத்தில் 20 லட்சம் பயனாளிகள்: அமைச்சர் சக்கரபாணி
தாயுமானவர் திட்டத்தில் 20 லட்சம் பயனாளிகள்: அமைச்சர் சக்கரபாணி
தாயுமானவர் திட்டத்தில் 20 லட்சம் பயனாளிகள்: அமைச்சர் சக்கரபாணி
ADDED : செப் 24, 2025 08:29 AM

ஒட்டன்சத்திரம் : தாயுமானவர் திட்டத்தின் மூலம் 20 லட்சம் பயனாளிகள் பயன்பெற்று வருகின்றனர்'' என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார்.
விருப்பாச்சியில் நடந்த உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய அவர் பேசியதாவது:
தாயுமானவர் திட்ட மூலம் 20 லட்சம் பயனாளிகள் பயன்பெற்று வருகின்றனர்.
பெற்றோரை இழந்த குழந்தைகள் 18 வயது வரையிலான பள்ளி படிப்பு முடியும் வரை மாதம் ரூ.2000 முதல் தொகை வழங்கும் அன்பு கரங்கள் திட்டம் உட்பட எண்ணற்ற திட்டங்களை முதலமைச்சர் அறிவித்து செயல்படுத்தி வருகிறார் என்றார்.
ஆர்.டி.ஓ., கண்ணன், தாசில்தார் சஞ்சய் காந்தி, ஊரக வளர்ச்சி உதவி திட்ட அலுவலர் பிரபாகரன், பி.டி.ஓ.,க்கள் காமராஜ், பிரபு பாண்டியன், தி.மு.க., ஒன்றிய செயலாளர்கள் தர்மராஜ், பாலு, ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் அசோக் வேலுச்சாமி கலந்து கொண்டனர்.