ADDED : மே 26, 2025 02:54 AM
திண்டுக்கல்: திண்டுக்கல் ரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் தூயமணி வெள்ளைச்சாமி தலைமையிலான போலீசார் புருலியா - திருநெல்வேலி (22605) அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரயிலில் நேற்று சோதனையில் ஈடுபட்டனர். அப்போது முன்பதிவில்லா பெட்டியில் கேட்பாரற்று கிடந்த பைகளில் 18.4 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது.
கைப்பற்றி விசாரணை நடத்திய போலீசார் பின்னர் போதைப்பொருள் நுண்ணறிவுப் பிரிவினரிடம் ஒப்படைத்தனர்.