/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ கொடைக்கானலில் விதிமீறல்களால் பேராபத்து மலையில் பாறைகள் வெடி வைத்து தகர்ப்பு; இயற்கை பேரிடர் நிகழும் அபாயம் கொடைக்கானலில் விதிமீறல்களால் பேராபத்து மலையில் பாறைகள் வெடி வைத்து தகர்ப்பு; இயற்கை பேரிடர் நிகழும் அபாயம்
கொடைக்கானலில் விதிமீறல்களால் பேராபத்து மலையில் பாறைகள் வெடி வைத்து தகர்ப்பு; இயற்கை பேரிடர் நிகழும் அபாயம்
கொடைக்கானலில் விதிமீறல்களால் பேராபத்து மலையில் பாறைகள் வெடி வைத்து தகர்ப்பு; இயற்கை பேரிடர் நிகழும் அபாயம்
கொடைக்கானலில் விதிமீறல்களால் பேராபத்து மலையில் பாறைகள் வெடி வைத்து தகர்ப்பு; இயற்கை பேரிடர் நிகழும் அபாயம்

உயர்நீதிமன்றம் உத்தரவு
வட்டக்கானல் குடியிருப்பு பகுதியில் விபத்து, ஆபத்தை விளைவிக்கும் வகையில் டெட்டனேட்டர் கொண்டு பாறைகளை தகர்க்கும் நடவடிக்கை குறித்து அப்பகுதி இயற்கை ஆர்வலர் ஒருவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்தார். நீதிபதி உத்தரவின்படி அதுதொடர்பான குவாரியை தடை செய்து ஆர்.டி.ஒ., அறிக்கை அளிக்க உத்தவிட்டார்.
பொறுப்பை தட்டிக்கழிக்கும் அவலம்
ஊராட்சிகள் மட்டுமல்லாது கொடைக்கானல் நகராட்சி பகுதிகளிலும் பல்வேறு விதிமீறல்கள் தொடர்கின்றன. இவ்விஷயத்தில் நீதிமன்றம் தலையிட்டால் வரலாறு காணாத ஊழல்கள் வெளிச்சத்திற்கு வரும். அதிகாரிகள் தரப்பில் தங்களுக்கு ஏராளமான பணிச்சுமைகள் இருப்பதாக ஒருவரை ஒருவர் கைகாட்டி பொறுப்பை தட்டிக் கழிக்கின்றனர். இதை சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் மாபியா கும்பல்கள் தங்களது தவறுகளை கன கச்சிதமாக செய்து வளம் காண்கின்றனர்.
அகற்றப்படாத ஆக்கிரமிப்புகள்
கொடைக்கானல் நகராட்சியில் 1993 மாஸ்டர் பிளான்படி விதிமீறல் கட்டடங்கள் 2019ல் சீல் வைக்கப்பட்டன. ஆனால் வரன்முறைப்படுத்துவதாக கூறி 5 ஆண்டுகளாகியும் சீரமைக்காத கட்டடங்கள் செயல்படுகின்றன. 2023ல் நீர்நிலை புறம்போக்குகளை அளவீடு செய்து ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்ற உத்தரவும் கிடப்பில் போடப்பட்டுள்ளது. சாமனியர்கள் கட்டுமானங்களில் கண்டிப்பு காட்டும் அதிகாரிகளின் சட்டம், தற்போது அதிகாரம் படைத்தவர்களுக்கு வளைந்து கொடுக்கிறது. நேர்மையான அதிகாரிகளை நியமித்து கொடைக்கானலில் தொடரும் விதிமீறல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.